செய்திகள்

மனைவியுடன் தகராறு- ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை

Published On 2018-08-27 06:18 GMT   |   Update On 2018-08-27 06:18 GMT
சென்னை சின்மையாநகரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போரூர்:

சென்னை சின்மையா நகர் குலசேகரபுரம் வேதா சாலையை சேர்ந்தவர் பாபு (வயது50). ஆட்டோ டிரைவர். பாபு குடிபழக்கம் கொண்டவர்.

இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 21-ந்தேதி மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்த பாபுவுடன் மனைவி தகராறில் ஈடுபட்டார்.

இதில் மன உளைச்சல் அடைந்த பாபு வீட்டு பூஜை அறையில் இருந்த விளக்கு எண்ணெயை உடலில் ஊற்றி திடீரென தீவைத்து கொண்டார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பாபு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழ்கரமனுர்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த முரளிக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
Tags:    

Similar News