செய்திகள்

மாவட்ட கலெக்டர்கள் உள்பட 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

Published On 2018-08-23 13:42 GMT   |   Update On 2018-08-23 14:02 GMT
முக்கிய துறைகளில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் என 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #IASOfficers #TNGovernment
சென்னை:

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயரதிகாரிகளாக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் உள்பட 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஈரோடு கலெக்டராக இருந்த பிரபாகர் கிருஷ்ணகிரிக்கும், மதுரை கலெக்டராக இருந்த வீர ராகவ ராவ் ராமநாதபுரத்திற்கும், சென்னை கலெக்டராக இருந்த அன்புசெல்வன் கடலூருக்கும், கிருஷ்ணகிரி கலெக்டராக இருந்த கதிரவன் ஈரோட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் கலெக்டராக இருந்த நடராஜன் மதுரைக்கும், அண்ணா தொழிலக நிறுவனத்தின் இணை இயக்குநராக இருந்த சண்முக சுந்தரம் சென்னை கலெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். 

பள்ளிகல்வித்துறை செயலாளர் உதய சந்திரன் தொல்லியல் துறைக்கும், உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் தொழிலாளர், வேலைவாய்ப்பு துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதுதவிர, பல முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
Tags:    

Similar News