என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர்கள் மாற்றம்"

    • சென்னை மாநகராட்சி புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • நீலகிரி மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா தன்னேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் 10 மாவட்ட கலெக்டர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    * தமிழக உள்துறை செயலாளராக இருந்த அமுதா வருவாய்த்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழக உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * சென்னை மாநகராட்சி புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தொழிலாளர் நலத்துறை செயலாளராக வீரராகவ ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * ராணிப்பேட்டை கலெக்டராக சந்திரகலா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மதுமதியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக எம்.அருணா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * நீலகிரி மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா தன்னேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தஞ்சை மாவட்ட கலெக்டராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * நாகை மாவட்ட கலெக்டராக ஆகாஸ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * அரியலூர் மாவட்ட கலெக்டராக ரத்தினசாமி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * கடலூர் மாவட்ட கலெக்டராக சிபி ஆதித்யா செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * கன்னியாகுமரி கலெக்டராக அழகுமீனா ஐஏஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக சிம்ரன்ஜீத் சிங் கலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

     

    • தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.
    • சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது மாற்றப்பட்டுள்ளார்.

    தமிழ்நாடு முழுவதும் 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தருமபுரி ஆட்சியராக சதீஷ், கிருஷ்ணகிரி ஆட்சியராக தினேஷ்குமார், விழுப்புரம் ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான், திண்டுக்கல் ஆட்சியராக சரவணன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரதாப், திருவண்ணாமலை ஆட்சியராக தர்பகராஜ், திருப்பத்தூர் ஆட்சியராக மோகனசந்திரன், திருவாரூர் ஆட்சியராக சிவசவுந்தரவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த சரயு பொதுத்துறை இணைச்செயலாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஆட்சியரான பிரபு சங்கரை சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பழனி, இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

    தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையராக இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை முதலமைச்சரின் செயலாளர், துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் இயக்குநர்கள், செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது மாற்றப்பட்டுள்ளார்.

    முக்கிய துறைகளில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் என 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #IASOfficers #TNGovernment
    சென்னை:

    தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயரதிகாரிகளாக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் உள்பட 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    ஈரோடு கலெக்டராக இருந்த பிரபாகர் கிருஷ்ணகிரிக்கும், மதுரை கலெக்டராக இருந்த வீர ராகவ ராவ் ராமநாதபுரத்திற்கும், சென்னை கலெக்டராக இருந்த அன்புசெல்வன் கடலூருக்கும், கிருஷ்ணகிரி கலெக்டராக இருந்த கதிரவன் ஈரோட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் கலெக்டராக இருந்த நடராஜன் மதுரைக்கும், அண்ணா தொழிலக நிறுவனத்தின் இணை இயக்குநராக இருந்த சண்முக சுந்தரம் சென்னை கலெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். 

    பள்ளிகல்வித்துறை செயலாளர் உதய சந்திரன் தொல்லியல் துறைக்கும், உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் தொழிலாளர், வேலைவாய்ப்பு துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதுதவிர, பல முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
    ×