செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - 3 பேர் படுகாயம்

Published On 2018-08-15 15:41 GMT   |   Update On 2018-08-15 15:41 GMT
உடையார்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடையார்பாளையம்:

உடையார்பாளையம் அருகே வாணத்திரையான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 63). விவசாயி. இவரது உறவினர்கள் ரவி (45), கலியபெருமாள். இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக் கிளில் தத்தனூரில் ஜாதகம் பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மூர்த்தியான் கிராமம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குணசேகரன் உள்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனி மாவட்டம், கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரசாத் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News