செய்திகள்

கருணாநிதி மறைவு - திருவாரூர் தென்னனின் உறவினர் உள்பட 3 பேர் அதிர்ச்சியில் மரணம்

Published On 2018-08-09 06:58 GMT   |   Update On 2018-08-09 06:58 GMT
நாகை மாவட்டம் சீர்காழி தாடாளன் தெற்கு வீதியை சேர்ந்தவர் சுந்தரம்பிள்ளை (வயது 80). இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நண்பரான திருவாரூர் தென்னனின் உறவினர் ஆவார்.
சீர்காழி:

இந்த நிலையில் நேற்று கருணாநிதி மறைவு செய்தியை சுந்தரம்பிள்ளை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென துக்கம் தாங்காமல் அதிர்ச்சியில் மயங்கி அவர் விழுந்தார். இதனால் அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தி.மு.க. அனுதாபியாக இருந்த சுந்தரம்பிள்ளை இறந்ததால் அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 26). இவர் நேற்று கருணாநிதி இறந்த செய்தியை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது மிகவும் சோகத்தில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

பலியான கலையரசன் உடலுக்கு அப்பகுதி தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளுர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ராஜரத்தினம் மகன் ஜெயராமன்(48). இவர் தீவிர தி.மு.க தொண்டர் ஆவார். திருத்துறைப்பூண்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை நிகழ்ச்சியை டி.வி.யில் ஜெயராமன் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது துக்கம் தாங்காமல் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து ஜெயராமனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Tags:    

Similar News