செய்திகள்

கருணாநிதி உடல்நலக்குறைவு - பெண்ணாடத்தில் தி.மு.க.பிரமுகர் மாரடைப்பால் மரணம்

Published On 2018-08-07 08:03 GMT   |   Update On 2018-08-07 08:03 GMT
கருணாநிதி உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக டி.வி.யில் செய்தி பார்த்த தி.மு.க. பிரமுகர் மாரடைப்பால் இறந்த சம்பவம் பெண்ணாடத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெண்ணாடம்:

கருணாநிதி உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக டி.வி.யில் செய்தி பார்த்த தி.மு.க. பிரமுகர் மாரடைப்பால் இறந்த சம்பவம் பெண்ணாடத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வடக்கு ரத வீதியை சேரந்தவர் குப்புசாமி(வயது 75). தி.மு.க. பிரமுகர். இவர் தி.மு.க.தலைவர் கருணாநிதி மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்.

கருணாநிதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை குப்புசாமி வீட்டில் டி.வி.பார்த்து கொண்டிருந்தார். அப்போது கருணாநிதியின் உடல்நிலை கவலைக் கிடமாக இருப்பதாக செய்தி வாசிக்கப்பட்டது.

இதைகேட்டதும் குப்புசாமி திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இறந்துபோன குப்புசாமிக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
Tags:    

Similar News