செய்திகள்

கட்டணமின்றி அரசு பஸ்களில் இலவசமாக காய்கறிகளை எடுத்து செல்லலாம்- நீலகிரி கலெக்டர் அறிவிப்பு

Published On 2018-07-25 10:49 GMT   |   Update On 2018-07-25 10:49 GMT
லாரிகள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பஸ்களில் இலவசமாக காய்கறிகளை எடுத்து செல்லலாம் என நீலகிரி கலெக்டர் அறிவித்துள்ளார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, லாரிகள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக விவசாயிகள் தங்கள் பகுதிகளிலிருந்து விவசாய பொருட்களை சந்தைக்கு தினமும் எடுத்துச் செல்லவும் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பேருந்தில் எவ்வித கட்டணமுமின்றி எடுத்துச் செல்லலாம். கூடுதல் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல அரசு பஸ் இதற்காக தனியாக வாடகைக்கு வழங்கப்படும் எனவும், மேலும் விவரங்களுக்கு அரசு போக்குவரத்துறையை தொடர்பு கொள்ளலாம் என அதில் அறிவித்துள்ளார். #tamilnews
Tags:    

Similar News