செய்திகள்
திருமங்கலம் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ரெயில்வே ஊழியர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரெயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையைச் சேர்ந்த 13 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை மாணவி ஊரின் காட்டுப் பகுதிக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆதிமூலம் என்பவரின் மகன் தண்டீஸ்வரன் (வயது 30) என்பவர் மாணவியிடம் ஆபாச சைகை காட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
உடனே அவர்கள் கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தண்டீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான தண்டீஸ்வரன் ரெயில்வே ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையைச் சேர்ந்த 13 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை மாணவி ஊரின் காட்டுப் பகுதிக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆதிமூலம் என்பவரின் மகன் தண்டீஸ்வரன் (வயது 30) என்பவர் மாணவியிடம் ஆபாச சைகை காட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
உடனே அவர்கள் கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தண்டீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான தண்டீஸ்வரன் ரெயில்வே ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.