டெல்லியில் இன்று தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ராகுல் திடீர் ஆலோசனை
சென்னை:
தமிழக காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசல் டெல்லி மேலிடத்தை அதிருப்தி அடையவைத்துள்ளது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரையும் ராகுல்காந்தி இன்று டெல்லிக்கு அழைத்து இருந்தார். அதன்பேரில் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி, வசந்தகுமார், விஜயதாரணி, பிரின்ஸ், காளிமுத்து, மலேசிய பாண்டியன், கணேஷ், ராஜேஷ்குமார் ஆகிய 8 பேரும் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
டெல்லியில் ராகுல்காந்தி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி நிலவரம், அரசியல் நிலவரம், கட்சி வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளார்.
இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் டெல்லியில் முகாமிட்டுள்ளார்கள்.
தமிழக காங்கிரசில் அதிரடி மாற்றங்கள் செய்ய விருப்பதாக கூறப்படும் நிலையில் ராகுல் காந்தியின் ஆலோசனை கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #CongressMLAs, #RahulGandhi