செய்திகள்

புதுக்கோட்டை அருகே வி.ஏ.ஓ. அலுவலகம்- அரசு பள்ளியில் கொள்ளை

Published On 2018-07-21 12:33 GMT   |   Update On 2018-07-21 12:33 GMT
புதுக்கோட்டை அருகே நேற்று இரவு வி.ஏ.ஓ. அலுவலகம் மற்றும் அரசு பள்ளியில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்  அருகே வீரப்பட்டியில் உள்ள அரசு கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , அங்கன் வாடி மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு பணி முடிந்ததும்  ஊழியர்கள் அலுவலகம், பள்ளி, அங்கன்வாடி மையத்தை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை  ஊழியர்கள் சென்று பார்த்த போது, வி.ஏ.ஓ. அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள்  உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அதே கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திலும் பொருட்கள் சிதறி கிடந்தது.ரூ.3 லட்சம் மதிப்புள்ள தளவாட பொருட்களும் கொள்ளை போயிருந்தது. 

நேற்றிரவு மர்மநபர்கள் வி.ஏ.ஓ. அலுவலகம், பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்து தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்ததும் அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை  தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News