செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே வேன் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - பெண் பலி

Published On 2018-07-01 17:26 GMT   |   Update On 2018-07-01 17:53 GMT
கும்மிடிப்பூண்டி அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரை சேர்ந்தவர் லைலா லட்சுமி (வயது 53). இவர் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 24-ந்தேதி லைலா லட்சுமி, தனது தம்பி சிவாவுடன்(39) மோட்டார் சைக்கிளில் சோழவரத்தில் இருந்து எளாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

புதுவாயல் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும்போது, அதே திசையில் வந்த வேன் ஒன்று மேற்கண்ட மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லைலா லட்சுமி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். சிவா சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News