செய்திகள்
குத்தாலம் அருகே லோடு ஆட்டோ மோதி ஒருவர் பலி
குத்தாலம் அருகே லோடு ஆட்டோ மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் போலீஸ் சரகம் செங்குடி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின்(40). இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிள் பாலையூர் மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஸ்டாலின் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.