செய்திகள்

கோட்டப்பட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி என்ஜினீயர் பலி

Published On 2018-06-18 18:00 IST   |   Update On 2018-06-18 18:00:00 IST
அரூர் கோட்டப்பட்டி அருகே, தென்பெண்ணை ஆற்றில் வாலிபர் மூழ்கி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கம்பைநல்லூர்:

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை சரடுவையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 24), என்ஜினீயர் படித்துள்ளார்.

இவர் நேற்று பெரியப்பட்டி புதுகாடு கிராமத்தில் நடந்த தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று உள்ளார். பின்பு, மதியம் 1.30 மணிக்கு அந்த பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தனது நண்பர்களுடன் குளித்து உள்ளார். அப்போது, ஆற்று சுழலில் சிக்கி நீரில் மூழ்கி உள்ளார். இதைக் கண்ட அவரது நண்பர்கள், ஹரிகிருஷ்ணனை மீட்டு, நரிப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு வரும்போது வழியிலேயே இறந்து விட்டார்.

இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News