செய்திகள்

வணக்கம்... எப்படி இருக்கிறீர்கள்? என தமிழில் பேசி உரையாடிய, பிரதமர் மோடி

Published On 2018-06-15 19:42 GMT   |   Update On 2018-06-15 19:47 GMT
மயிலாடுதுறை தொழில் முனைவோரிடம் பிரதமர் மோடி, “வணக்கம்... எப்படி இருக்கிறீர்கள்?” என்று தமிழில் பேசி காணொலி காட்சி மூலம் உரையாடினார்.
மயிலாடுதுறை:

‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் உரையாடினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுடன் அவர் உரையாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மோடி காணொலி காட்சி மூலம் உரையாடியவர்களில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரும் ஒருவர். இவர் மயிலாடுதுறையில் ‘ஐமார்க் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நேற்று காலை 9.30 மணிக்கு பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் சுரேசை தொடர்பு கொண்டு உரையாடினார். சுரேஷ் தனது நிறுவனத்தில் இருந்தபடி பிரதமருடன் பேசினார்.


சுரேசுடன் பிரதமர் பேசத்தொடங்கும் போது, “வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்?” என்று தமிழில் பேசி நலம் விசாரித்தார். அதன்பிறகு அவர் ஆங்கிலத்தில் உரையாடினார்.

அப்போது, டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி விரிவாக பேசிய மோடி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி பொதுமக்களுக்கு குறிப்பாக ஊரக மற்றும் கிராமப்புற மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காகவே பொது சேவை மையம் மூலம் கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
Tags:    

Similar News