செய்திகள்
திருட்டு டி.வி.டி தயாரிப்பு- மயிலாடுதுறை தியேட்டருக்கு சீல் வைப்பு
திருட்டுத்தனமாக டி.வி.டி தயாரித்து விற்கப்படுவது தொடர்பாக மயிலாடுதுறை தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை:
தமிழ் சினிமாவில் திருட்டுத்தனமாக படங்கள் இணையத்தில் வெளியாவதும் டிவிடிக்கள் தயாரித்து விற்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘ஒரு குப்பை கதை’ படம் இணையதளத்திலும், திருட்டு டி.வி.டி.யாகவும் வெளியானது.
இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அஸ்லம் நேற்று கடலூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
‘வெளிநாட்டு உரிமை கொடுத்தால் அதன் மூலம் திருட்டுத்தனமாக படம் வெளியாகிவிடுகிறது என்பதால் என்னுடைய படத்துக்கு வெளிநாட்டு உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை. எனவே வெளிநாடுகளில் படம் வெளியாகவில்லை.
ஆனாலும் இணையத்திலும் திருட்டு டிவிடியிலும் படம் வெளியாகி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த டிவிடியை வாங்கி ஆராய்ந்ததில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் மயிலாடுதுறை கோமதி திரையரங்கில் தான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வந்தது.
எனவே சம்பந்தப்பட்ட இணையதளம், திரையரங்கு உரிமையாளர், திரையரங்க மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’
இவ்வாறு புகாரில் கூறி இருந்தார்.
போலீசார் நடவடிக்கை எடுத்து அதிரடியாக அந்த திரையரங்கிற்கு சீல் வைத்தனர். அந்த திரையரங்க ஊழியர் ஒருவரையும் கைது செய்தனர். #tamilnews
தமிழ் சினிமாவில் திருட்டுத்தனமாக படங்கள் இணையத்தில் வெளியாவதும் டிவிடிக்கள் தயாரித்து விற்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘ஒரு குப்பை கதை’ படம் இணையதளத்திலும், திருட்டு டி.வி.டி.யாகவும் வெளியானது.
இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அஸ்லம் நேற்று கடலூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
‘வெளிநாட்டு உரிமை கொடுத்தால் அதன் மூலம் திருட்டுத்தனமாக படம் வெளியாகிவிடுகிறது என்பதால் என்னுடைய படத்துக்கு வெளிநாட்டு உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை. எனவே வெளிநாடுகளில் படம் வெளியாகவில்லை.
ஆனாலும் இணையத்திலும் திருட்டு டிவிடியிலும் படம் வெளியாகி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த டிவிடியை வாங்கி ஆராய்ந்ததில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் மயிலாடுதுறை கோமதி திரையரங்கில் தான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வந்தது.
எனவே சம்பந்தப்பட்ட இணையதளம், திரையரங்கு உரிமையாளர், திரையரங்க மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’
இவ்வாறு புகாரில் கூறி இருந்தார்.
போலீசார் நடவடிக்கை எடுத்து அதிரடியாக அந்த திரையரங்கிற்கு சீல் வைத்தனர். அந்த திரையரங்க ஊழியர் ஒருவரையும் கைது செய்தனர். #tamilnews