செய்திகள்
புதுவை அரசு நிர்வாகத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த முயற்சி- நாராயணசாமி புகார்
புதுச்சேரி அரசு நிர்வாகத்தை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
கீழ்வேளூர்:
நாகை அடுத்த நாகூரில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசை எதிர்பார்க்க தேவையில்லை. வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது
தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை, அரசுத் துறைகளில் இணை செயலாளர்களாக நியமிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும், நிர்வாக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ்.,மற்றும் சங்பரிவார அமைப்புகளை அரசு துறைகளில் உள்ளே கொண்டு வரவே மத்திய அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது. புதுச்சேரி அரசு நிர்வாகத்தை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது. இதை ஒருபோதும் புதுச்சேரி அரசு ஏற்றுக்கொள்ளாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகை அடுத்த நாகூரில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசை எதிர்பார்க்க தேவையில்லை. வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது
தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை, அரசுத் துறைகளில் இணை செயலாளர்களாக நியமிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும், நிர்வாக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ்.,மற்றும் சங்பரிவார அமைப்புகளை அரசு துறைகளில் உள்ளே கொண்டு வரவே மத்திய அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது. புதுச்சேரி அரசு நிர்வாகத்தை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது. இதை ஒருபோதும் புதுச்சேரி அரசு ஏற்றுக்கொள்ளாது.
இவ்வாறு அவர் கூறினார்.