செய்திகள்

மீஞ்சூர்- பொன்னேரியில் 3 பெண்கள் திடீர் மாயம்- போலீசார் விசாரணை

Published On 2018-06-08 09:32 GMT   |   Update On 2018-06-08 09:32 GMT
மீஞ்சூர் மற்றும் பொன்னேரியில் 3 பெண்கள் திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த சோமஞ்சேரி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் சோபனா (வயது 15).

கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்ற சோபனா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அருந்ததி நகரைச்சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சரிதா (19). வீட்டில் இருந்து வெளியே சென்ற சரிதா காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி அடுத்த ஆலாடு பூந்தோட்டகாலனியைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி புனிதா (22) கடந்த 23-ந் தேதி புனிதா உடல்நிலை சரிஇல்லாததால் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

சம்பத் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது புனிதாவை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் புனிதா எங்கு சென்றார். என்ன ஆனார் என்று தெரியவில்லை.

மாயமான 3 பெண்களும் கடத்தப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் மாயமானார்கள். தற்போது பெண்கள் மாயமாகும் சம்பவம் குறைந்து இருந்தது.

இப்போது பெண்கள் மீண்டும் மாயமாகும் சம்பவம் அதிகரித்து இருப்பது பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News