செய்திகள்

கோட்டைப்பட்டினம் கடற்கரையில் முதியவர் பிணம்: போலீசார் விசாரணை

Published On 2018-06-07 15:13 GMT   |   Update On 2018-06-07 15:13 GMT
கோட்டைப்பட்டினம் கடற்கரையில் முதியவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம்:

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளம் அருகே கடற்கரையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக கடலோர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையிலான போலீசார் மற்றும் கிராமநிர்வாக அதிகாரி சண்முகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவர் யார்? என விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், இறந்து கிடந்த முதியவர் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ஓனாங்குடியை சேர்ந்த கணேசன்(வயது 73) என்றும், அவர் கோட்டைப்பட்டினம் தர்காவிற்கு வந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் இது குறித்து அவர் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கடலில் குளிக்கும்போது மூழ்கி இறந்தாரா? அல்லது வேறெதுவும் காரணமாக என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதியவர் ஒருவர் கடற்கரையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News