செய்திகள்

சாத்தான்குளத்தில் தாய்-மகள் மீது தாக்குதல்: 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு வலைவீச்சு

Published On 2018-06-06 14:32 GMT   |   Update On 2018-06-06 14:32 GMT
வீட்டு முன்பு கூரை அமைத்த தகராறில் தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய 4 பெண்கள் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள கடகுளத்தை சேர்ந்தவர் ஜெய்சீலன். இவரது மனைவி குணசீலி. இவர்களது மகள் டைட்டா கேப்ரின் (வயது 16). இவர்களது வீட்டின் முன்பு வெயிலுக்காக கூரை அமைத்திருந்தனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த அகிலா, அல்போன்ஸ், வாசுகி, செல்வி, ஜேசம்மாள், ஜெயபிரபு, சுகன் ஆகியோர்சிலர் இந்த கூரையை அகற்றும்படி கூறியுள்ளனர். ஆனால் குணசீலி வெயிலுக்காக அமைத்துள்ளேன். பின்னர் இதை அகற்றிவிடுகிறேன் என கூறியுள்ளார். 

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்தவர்கள் குணசீலி கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இதை தடுக்க சென்ற டைட்டா கேப்ரினையும் தாக்கியுள்ளனர். 

இது குறித்து தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை வலைவீசி தேடி வருகிறார்.
Tags:    

Similar News