செய்திகள்
திருப்பூரில் மாணவியை ஆட்டோவில் கடத்தி பலாத்காரம்- 4 பேர் கைது
திருப்பூரில் பிளஸ்-2 மாணவியை ஆட்டோவில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம், பக்கம் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பெற்றோர் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு திருப்பூர் வடக்கு மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் கலையரசி மாணவி மாயமானது குறித்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் மாணவி திருச்சி மாவட்டம் துறையூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான தனிப்படை போலீசார் துறையூர் விரைந்து சென்று மாணவியை மீட்டனர். போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
திருப்பூர் ஆத்துபாலம் பகுதியை சேர்ந்த நாகராஜ்(22) என்ற பனியன் தொழிலாளி மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். இதையடுத்து மாணவியை அடையும் நோக்கத்தில் அவரை கடத்த திட்டமிட்டார். அதன்படி கடந்த 29-ந்தேதி மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட நாகராஜ் தனது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் ஜீவா(20), மணிகண்டன்(20) மற்றும் 17 வயது சிறுவனுடன் சேர்ந்து மாணவியை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கடத்தி சென்றனர்.
காங்கயம் வரை ஆட்டோவில் சென்ற அவர்கள் பின்னர் அங்கிருந்து திருச்சி மாவட்டம், துறையூருக்கு மாணவியை கடத்தி சென்றனர். அப்போது வாலிபர் நாகராஜ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகராஜ் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜீவா, மணிகண்டன், 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். நாகராஜ் உள்பட 3 பேர் கோவை மத்திய சிறையிலும், 17 வயது சிறுவன் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மாணவியை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். #Tamilnews
திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம், பக்கம் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பெற்றோர் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு திருப்பூர் வடக்கு மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் கலையரசி மாணவி மாயமானது குறித்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் மாணவி திருச்சி மாவட்டம் துறையூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான தனிப்படை போலீசார் துறையூர் விரைந்து சென்று மாணவியை மீட்டனர். போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
திருப்பூர் ஆத்துபாலம் பகுதியை சேர்ந்த நாகராஜ்(22) என்ற பனியன் தொழிலாளி மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். இதையடுத்து மாணவியை அடையும் நோக்கத்தில் அவரை கடத்த திட்டமிட்டார். அதன்படி கடந்த 29-ந்தேதி மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட நாகராஜ் தனது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் ஜீவா(20), மணிகண்டன்(20) மற்றும் 17 வயது சிறுவனுடன் சேர்ந்து மாணவியை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கடத்தி சென்றனர்.
காங்கயம் வரை ஆட்டோவில் சென்ற அவர்கள் பின்னர் அங்கிருந்து திருச்சி மாவட்டம், துறையூருக்கு மாணவியை கடத்தி சென்றனர். அப்போது வாலிபர் நாகராஜ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகராஜ் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜீவா, மணிகண்டன், 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். நாகராஜ் உள்பட 3 பேர் கோவை மத்திய சிறையிலும், 17 வயது சிறுவன் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மாணவியை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். #Tamilnews