செய்திகள்

சேலம் அருகே கார் மோதி அ.தி.மு.க. நிர்வாகி பலி

Published On 2018-05-25 16:59 IST   |   Update On 2018-05-25 16:59:00 IST
சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 75). அ.தி.மு.க. அவைத் தலைவராக இருந்து வந்தார். காண்டிராக்ட் தொழிலும் செய்து வந்தார். நேற்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற கார் ராஜகோபால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் ராஜகோபால் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து காரை ஓட்டி வந்த ராஜனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News