தமிழ்நாடு செய்திகள்

கார்த்திகை தீபத்தை தவிர்த்து பிறநாட்களில் தீபமேற்ற கூடாது- திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அர்ச்சகர்கள் கடிதம்

Published On 2025-12-05 11:40 IST   |   Update On 2025-12-05 11:49:00 IST
  • தமிழகத்தின் பல்வேறு கோயில்களைச் சேர்ந்த குருக்கல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
  • இதர நாட்களில் தீபம் ஏற்றுவது வழக்கத்திற்கு மாறானது என கருத்து.

கார்த்திகை தீபத்தை தவிர்த்து பிற நாட்களில் தீபமேற்றுவது நல்லதல்ல என்றும், இதர நாட்களில் தீபம் ஏற்றுவது வழக்கத்திற்கு மாறானது எனவும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அர்ச்சகர்கள், கோயில் செயல் அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிவாகமங்களில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவானது விஷேடமான முறையில் அதிவாசங்களுடன் கூடிய தீபத்தை திருக்கோவில் கோபுரங்கள், மண்டபங்கள், பிரகாரங்கள், சொல்லப்பட்டிருக்கின்றது.

அத்தகைய திருக்கார்த்திகையன்று திருக்கோவில் சமீபத்தில் உள்ள மலைகள், கிரிவலப் பாதைகள் ஆகிய இடங்களில் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களாக அமைகின்றது. மேலும் கார்த்திகை மாதம் வருகின்ற கார்த்திகை நட்சத்திரத்திலோ அல்லது பௌர்ணமியிலோ தீபம் ஏற்றுவது உத்தர காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

இதர நாட்களில் செய்யப்படுவது விஷேடமாக சொல்லப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News