செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: துக்க வீடு சென்று திரும்பியவர் பலி

Published On 2018-05-12 22:52 IST   |   Update On 2018-05-12 22:52:00 IST
துக்க வீடு சென்று திரும்பியபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ராஜபாளையம்:

நெல்லை மாவட்டம், தேவிபட்டினத்தைச் சேர்ந்த தொழிலாளி முருகன் (வயது 24). துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் ராஜபாளையம் வந்தார். பின்னர் மாலையில் அவர் ஊருக்கு புறப்பட்டார்.

ராஜபாளையம்- தென்காசி சாலையில் கோவிலூர் அரசு விதைப் பண்ணை அருகே வந்த போது, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென திரும்பியுள்ளது.

இதனை எதிர்பார்க்காத முருகன், தனது வாகனத்தை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்கு மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முருகன் பலத்த காயம் அடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு முருகன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது தந்தை மாடசாமி கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News