2வது போட்டியிலும் வெற்றி: இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 189 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து டக் வொர்த் லூயிஸ் முறையில் 173 ரன் எடுத்து வென்றது.
பல்லேகலே:
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என கைப்பற்றி அசத்தியது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான 2வது டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்
தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது.
பவன் ரத்தினநாயகெ 40 ரன்னும், கமில் மிஸ்ரா 36 ரன்னும், பதும் நிசங்கா 34 ரன்னும், குசால் மெண்டிஸ் 32 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.
டக்வொர்த் லெவிஸ் முறைப்படி 17 ஓவரில் 168 ரன்கள் இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தார். சிறப்பாக ஆடிய டாம் பெண்டன் அரை சதம் கடந்து 54 ரன்கள் எடுத்தார். ஹாரி புரூக் 34 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், இங்கிலாந்து 16.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து வென்றதுடன், டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.