ரஞ்சி டிராபி: காலிறுதிக்கு முன்னேறிய அணிகள் இவைதான்
- காலிறுதி போட்டிகள் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளன.
- அரையிறுதி பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறுகின்றன.
புதுடெல்லி:
ரஞ்சி கோப்பை தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றுடன் லீக் போட்டிகள் முடிந்தன.
இந்நிலையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஏ பிரிவில் இருந்து ஜார்க்கண்ட், ஆந்திராவும், பி பிரிவில் இருந்து கர்நாடகா, மத்திய பிரதேசமும், சி பிரிவில் இருந்து பெங்கால், உத்தராகண்டும், டி பிரிவில் இருந்து மும்பை, ஜம்மு காஷ்மீர் ஆகிய அணிகள் முன்னேறின.
முதல் காலிறுதியில் ஜார்க்கண்ட், உத்தரகாண்ட்டும், 2வது காலிறுதியில் மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீரும், 3வது காலிறுதியில் பெங்கால், ஆந்திராவும், 4வது காலிறுதியில் மும்பை, கர்நாடகாவும் மோதுகின்றன.
காலிறுதி போட்டிகள் அனைத்தும் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளன. அரையிறுதி பிப்ரவரி 15ம் தேதியும், இறுதிப்போட்டி பிப்ரவரி 24-ம் தேதியும் நடைபெறுகின்றன.