செய்திகள்

காரைக்குடி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

Published On 2017-12-21 17:00 IST   |   Update On 2017-12-21 17:00:00 IST
காரைக்குடி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை, டிச.21-

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரை சேர்ந்தவர் சவுந்தர்யா (வயது 28).

இவருக்கும் திருச்சியை சேர்ந்த சசிதரன் என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது 60 பவுன் நகை, ரு. 3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் சவுந்தர்யா காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதில் எனது கணவர் சசிதரன் கூடுதலாக வரதட்சணை கேட்டு என்னை துன்புறுத்துகிறார். இதற்கு அவரது பெற்றோர் குருராஜப்பா-பத்மாவதி, உறவினர் ஸ்ரீதரன் ஆகி யோர் உடந்தையாக உள்ளனர். எனவே அவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி சசிதரன் மற்றும் அவரது பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Similar News