செய்திகள்

தேவகோட்டை, திருவேகம்பத்தூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2017-12-17 12:14 GMT   |   Update On 2017-12-17 12:14 GMT
தேவகோட்டை பகுதியில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பங்கள் நடந்தன. இந்த சம்பவம் காவல் துறைக்கு பெரும் சவலாக அமைந்தது.

மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் உத்தரவின் பேரில் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஆய்வாளர் குமரன் தலைமையில், சார்பு ஆய்வாளர்கள் மீனாட்சிசுந்தரம், மருது, விஜய்சண்முகநாதன், தலைமை காவலர் கிருஷ்ண மூர்த்தி, காவலர்கள் பிரபாகரன், இளங்கோ, செல்வ பிரபு, எண்ணெய்துரை ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

சருகணி அருகே உள்ள தாஸ்புரம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை தும்பைபட்டி சுப்பிரமணி மகன் சண்முகம் (வயது 42), பரமக்குடி பொன்னையாபுரம் ரங்கன் மகன் சிலம்பரசன் (37), அதே ஊரைச்சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன் (33), மறவமங்கலம் வேலு மகன் கோவிந்தராஜன் ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரனை நடத்தினர்.

அப்போது தேவகோட்டை தாலுகா திருவேகம்பத்தூர் இளையான்குடியில் திருட்டுகளில் தொடர்புடைவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்த தங்க நகைகள் 22 பவுன், வெள்ளி கொலுசு ஒரு ஜோடி, ரொக்க பணம் 4300, திருட்டுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் மக்கள் நிம்மதி அடைந்தாலும் தேவகோட்டை நகரில் வீடுகளை உடைத்து தொடர் திருட்டில் தொடர்புடையவர்கள் இன்னும் பிடிபடமல் காவல் துறைக்கு சவாலாக உள்ளனர்.

Tags:    

Similar News