செய்திகள்

காரைக்குடியில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 3 லட்சம் மோசடி: 2 வாலிபர்கள் கைது

Published On 2017-12-14 12:11 GMT   |   Update On 2017-12-14 12:12 GMT
காரைக்குடியில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி:

காரைக்குடியில் உள்ள அரசு வங்கியில் அதே பகுதியை சேர்ந்த ஹரி ஹரசுதன் (வயது24), மணி கண்டன் (31) ஆகியோர் கடந்த 2014-ம் ஆண்டு நகைகளை அடகு வைத்தனர்.

இவர்களின் நகைகளை வங்கி மதீப்பிட்டாளர் சுந்தரேசன் (34) ஆய்வு செய்து உண்மையான நகைகள் என கூறிய பின் வங்கி மூலம் ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் வங்கியின் முதுநிலை மேலாளர் மணிகண்டன் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதில் வங்கியில் அடகு வைக்கபட்ட நகைகளை ஆய்வு செய்தபோது ஹரிஹரசுதன், மணிகண்டன் ஆகியோரின் நகை போலியானது என கண்டறியப்பட்டது. இதற்கு சுந்தரேசன் உடந்தையாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப் பதிவு செய்து ஹரிஹரசுதன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். சுந்தரேசனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News