செய்திகள்

காரைக்குடியில் கல்லூரி பஸ் மோதி தொழிலாளி பலி: டிரைவர் கைது

Published On 2017-12-14 10:12 GMT   |   Update On 2017-12-14 10:12 GMT
காரைக்குடியில் இன்று காலை கல்லூரி பஸ் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 48). விவசாய கூலி தொழிலாளியான இவர் வேலை நிமித்தமாக காரைக்குடிக்கு வந்திருந்தார்.

இன்று காலை அவர் காரைக்குடி கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக லட்சுமணன் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அழகப்பாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பஸ் டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மணவாளன்கரையை சேர்ந்த கணேசனை (29) கைது செய்தார்.

காரைக்குடி அருகே உள்ள ஆத்தாங்குடியை சேர்ந்தவர் சையது முஸ்தபா (52). இவர் மொபட்டில் பள்ளத்தூருக்கு சென்றார். அப்போது ரோட்டின் குறுக்கே வந்த மாடு மீது மொபட் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாய மடைந்த சையது முஸ்தபா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News