செய்திகள்

திருப்புவனம் அருகே கந்து வட்டி கொடுமை: வாலிபர் மீது வழக்கு

Published On 2017-12-12 17:07 GMT   |   Update On 2017-12-12 17:08 GMT
திருப்புவனம் அருகே கந்து வட்டி கொடுமை காரணமாக வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் காமாட்சி. இவர் திருப்புவனம் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

கடந்த 2012-ம் ஆண்டு அல்லி நகரத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவரிடம் வீட்டு பத்திரங்களை அடமானமாக வைத்து ரூ. 1 லட்சம் கடன் பெற்றேன்.

அதற்கு வட்டியும் சேர்த்து ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்துவிட்டேன். ஆனால் அவர் வீட்டு பத்திரத்தை கொடுக்க மறுக்கிறார்.

இது பற்றி கேட்டபோது கூடுதலாக ரூ. 3 லட்சம் கேட்கிறார். மேலும் வீட்டை தனது பெயருக்கு மாற்றித்தருமாறும் மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து வீட்டு பத்திரத்தை மீட்டுத்தர வேண்டும்

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி விசாரணை நடத்தி சபரிநாதன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Tags:    

Similar News