செய்திகள்

அறந்தாங்கியில் மிதமான மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2017-11-27 22:08 IST   |   Update On 2017-11-27 22:08:00 IST
அறந்தாங்கி பகுதியில் நேற்று மிதமான மழை பெய்தது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அறந்தாங்கி:

அறந்தாங்கி பகுதியில் நேற்று மிதமான மழை பெய்தது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அறந்தாங்கி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அறந்தாங்கியில் லேசான தூறல் இருந்தது. மாலை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.

காவிரி பாசனப் பகுதியான நாகுடி பகுதியிலும் மிதமான மழை பெய்தது. மழை பெய்த போதிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிருக்கு இந்த மழையால் எவ்வித பயனும் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Similar News