செய்திகள்

சிவகங்கை அருகே கடைக்குச் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2017-11-24 10:54 GMT   |   Update On 2017-11-24 10:54 GMT
சிவகங்கை அருகே கடைக்குச் சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவகங்கை:

சிவகங்கை தாலுகாவில் உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் அந்தப்பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ரேவதியிடம் ஒரு முகவரியை காட்டி இந்த இடத்துக்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டனர்.

அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்த போதே அவர்கள் ரேவதி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.

இது குறித்து சிவகங்கை தாலுகா போலீசில் ரேவதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை தீவிரமாக தேடி வருகிறார்.

Tags:    

Similar News