செய்திகள்
மதுக்கடை அருகே பெண் போலீஸ் கணவர் அடித்து கொலை
மதுக்கடை அருகே பெண் போலீசின் கணவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் உள்ள அணுமின்நிலைய ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த வர் ஆண்ட்ரூஸ் ராஜய்யா (வயது 52). இவர் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் ஆய்வுக் கூட ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மல்லிகா போலீசாக பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆண்ட்ரூஸ் ராஜய்யா பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கல்பாக்கத்தை அடுத்த இளையனார்குப்பத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அவர் இறந்து கிடந்தார். தலையில் பலத்த ரத்த காயம் இருந்தது. மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்திருப்பது தெரிந்தது. இது குறித்து சதுரங்கபட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. எட்வர்ட் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆண்ட்ரூஸ் ராஜய்யா கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. அவரது செல்போன் எண்ணை வைத்து கடைசியாக யாருடன் பேசினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை நடந்த இடம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட கோரி சில அமைப்பினர் நாளை மறுநாள் போராட்டம் நடத்த முடிவு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் மதுக்கடை அருகே அணுமின் நிலைய ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்பாக்கத்தில் உள்ள அணுமின்நிலைய ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த வர் ஆண்ட்ரூஸ் ராஜய்யா (வயது 52). இவர் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் ஆய்வுக் கூட ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மல்லிகா போலீசாக பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆண்ட்ரூஸ் ராஜய்யா பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கல்பாக்கத்தை அடுத்த இளையனார்குப்பத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அவர் இறந்து கிடந்தார். தலையில் பலத்த ரத்த காயம் இருந்தது. மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்திருப்பது தெரிந்தது. இது குறித்து சதுரங்கபட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. எட்வர்ட் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆண்ட்ரூஸ் ராஜய்யா கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. அவரது செல்போன் எண்ணை வைத்து கடைசியாக யாருடன் பேசினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை நடந்த இடம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட கோரி சில அமைப்பினர் நாளை மறுநாள் போராட்டம் நடத்த முடிவு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் மதுக்கடை அருகே அணுமின் நிலைய ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.