செய்திகள்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்: 52 பேர் கைது

Published On 2017-04-22 19:05 IST   |   Update On 2017-04-22 19:05:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய சாலைமறியல் போராட்டத்தில் நான்கு பெண்கள் உட்பட 52 பேர் கைது செய்யப்ட்டனர்.
புதுக்கோட்டை:

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். அதனொரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து துண்டுப்பிரசும் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் கூடிய வாலிபர் சங்கத்தினரை கைது செய்யப்போவதாக போலீசார் மிரட்டினர். தடையை மீறி ஊர்வலமாகச் சென்ற வாலிபர் சங்கத்தினரை வடகாடும் முக்கம் என்ற இடத்தில் போலீசார் மறித்து கைதாகுமாறு வலியுறுத்தினர். ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை எனக்கூறி போலீசாருடன் சங்கத் தலைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமை வகித்தார். நான்கு பெண்கள் உட்பட 52 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்

Similar News