செய்திகள்

கொள்ளிடத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2017-04-21 16:53 IST   |   Update On 2017-04-21 16:53:00 IST
சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுலகம் முன்பு குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சீர்காழி:

சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுலகம் முன்பு குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் ஒன்றியம் சந்தப்படுகை கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாததால் மாங்கனாம்பட்டு கிராமத்திலிருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 3மணிநேரம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் காவிநீராகவும், பற்றாக் குறையாகவும் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிவந்தனர்.

இந்நிலையில் காலி குடங்களுடன் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொள்ளிடம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே கொள்ளிடம் மகேந்திரப் பள்ளி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா,ஆணையர் வாசுதேவன், கொள்ளிடம் காவல் சப்-இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Similar News