செய்திகள்
காவிரி டெல்டா மாவட்டங்களில் வருகிற 25-ந் தேதி முதல் தொடர் ரெயில் மறியல்: பி.ஆர். பாண்டியன்
டெல்டா மாவட்டங்களில் வருகிற 25-ந் தேதி முதல் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என பி.ஆர். பாண்டியன் கூறினார்.
சீர்காழி:
சீர்காழியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க நாகை மாவட்ட கூட்டம் நடைபெற்றது. விவசாய சங்க தலைவர் வைத்திய நாதன் தலைமை தாங்கினார்.
இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறி விட்டது. கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. வருவாய் இன்றி 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஏற்க மறுத்து வருவது வேதனை அளிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும், 2 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் வருகிற 25-ந் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சேந்தங்குடி ரெயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மே 1-ந் தேதி விவசாயிகள் ஒன்று திரண்டு மேம்பாலத்தை திறந்து பயன்பாட்டுக்கு விடுவோம்.
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி மே 16-ந் தேதி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், வர்த்தகர்கள், பொது மக்களை ஒன்று திரட்டி கொள்ளிடம் ஆற்றில் முற்றுகையிட்டு ஒரு நாள் முழுவதும் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சீர்காழியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க நாகை மாவட்ட கூட்டம் நடைபெற்றது. விவசாய சங்க தலைவர் வைத்திய நாதன் தலைமை தாங்கினார்.
இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறி விட்டது. கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. வருவாய் இன்றி 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஏற்க மறுத்து வருவது வேதனை அளிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும், 2 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் வருகிற 25-ந் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சேந்தங்குடி ரெயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மே 1-ந் தேதி விவசாயிகள் ஒன்று திரண்டு மேம்பாலத்தை திறந்து பயன்பாட்டுக்கு விடுவோம்.
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி மே 16-ந் தேதி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், வர்த்தகர்கள், பொது மக்களை ஒன்று திரட்டி கொள்ளிடம் ஆற்றில் முற்றுகையிட்டு ஒரு நாள் முழுவதும் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.