செய்திகள்

வேதாரண்யம் அருகே அரசு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2017-04-19 16:35 IST   |   Update On 2017-04-19 16:35:00 IST
வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் அலுவலக உதவியாளரை பணி செய்யவிடாமல் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் காவலராக (வாட்ச்மேன்) பணியாற்றுபவர் அண்ணாத்துரை (வயது 59). இவர் பணியில் இருந்தபோது புஷ்பவனத்தை சேர்ந்த மணிவண்ணன் வயது (47) என்பவர் தாலுக்கா அலுவலகத்தின் உள்ளே வந்து படமெடுத்துள்ளார். அனுமதியில்லாமல் படம் எடுக்கக்கூடாது என்று அண்ணாத்துரை கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மணிவண்ணன், அண்ணாத்துரையை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அண்ணாத்துரை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்துள்ளார்.

Similar News