செய்திகள்

கோடியக்கரையில் தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2017-04-19 10:35 GMT   |   Update On 2017-04-19 10:35 GMT
கோடியக்கரையில் தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 35). இவரது மனைவி லதா (31) திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மணிவண்ணன் வெளிநாடு சென்று வருபவர்.

கடந்த 16-ந் தேதி குழந்தை அழுதுகொண்டிருந்தது. இது குறித்து மணிவண்ணன் லதாவை கண்டித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். கணவன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த லதா வீட்டில் தூக்குமாட்டிக் கொண்டார்.

தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் லதாவை மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்துவிட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவுசெய்து திருமணமாகி நான்கு ஆண்டுகளில் லதா இறந்ததால் மேல் விசாரணைக்காக நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தார்.

Similar News