செய்திகள்

குத்தாலம் அருகே தீ விபத்தில் பெண் பலி

Published On 2017-04-19 15:57 IST   |   Update On 2017-04-19 15:57:00 IST
குத்தாலம் அருகே தீ விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குத்தாலம்:

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர், நாகம்பாடி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் மனைவி ரேணுகாதேவி(வயது26) சம்பவத்தன்று வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்த போது எதிர்பாராதவிதமாக ரேணுகாதேவியின் உடலில் தீப்பற்றியது. இதில் பலத்த காயமடைந்த ரேணுகாதேவியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ரேணுகாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். ரேணுகாதேவிக்கு திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் நிறைவடையாத காரணத்தால் பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

Similar News