செய்திகள்

கோர்ட்டில் அம்பேத்கர் படம் அகற்றம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

Published On 2017-04-18 22:54 IST   |   Update On 2017-04-18 22:54:00 IST
மயிலாடுதுறையில் கோர்ட்டில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
குத்தாலம்:

மயிலாடுதுறை கோர்ட்டில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி மயிலாடுதுறை வக்கீல்கள் சங்கம் சார்பில் அம்பேத்கர் படத்துடன் கூடிய கல்வெட்டு திறப்பு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அனுமதி பெறாமல் அம்பேத்கர் படத்துடன் கூடிய கல்வெட்டு வைக்கப்பட்டதாகவும், இதனால் அம்பேத்கர் படத்துடன் கூடிய கல்வெட்டு அகற்றப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று கோர்ட்டில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கட்சியினர் மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலித்தீர்த்தான், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குலோத்துங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய அமைப்பாளர் இளந்தமிழன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அன்புசெல்வன், சீர்காழி தொகுதி செயலாளர் தாமுஇனியவன் உள்பட சுமார் 50 பேரை கைது செய்தனர்.

Similar News