செய்திகள்

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18 லட்சத்தில் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கினார்

Published On 2017-04-01 20:28 IST   |   Update On 2017-04-01 20:28:00 IST
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார். கூட்டத்தில் கலெக்டர்  தெரிவித்ததாவது:-

அரியலூர் மாவட்ட த்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு வகையான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  இதில் குறிப்பாக இரண்டு கால்கள் செயல்கள் இழந்த மற்றும் முற்றிலும் நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 22 நபர்களுக்கு ரூ.12 லட்சத்து 91 ஆயிரத்து 180 மதிப்பில் வழங்கப்பட்டது.

மேலும் லேன்கோ பவுன் டேஷன் கும்பகோணம் மூலம் (கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதி) நிதித்திட்டத்தின் கீழ் 70 நபர்களுக்கு செயற்கை அவையங்களும் (கால்கள்), 77 நபர்களுக்கு ஊன்று கோல்களும், 8 நபர்களுக்கு முடநீக்கு சாதனைங்களும் என ஆக மொத்தம் 155 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை பெற மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் விண்ணப்பித்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இம் தியாஸ் முகமது, இளநிலை மறு வாழ்வு அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Similar News