செய்திகள்

பெண்ணை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறைதண்டனை: ஜெயங்கொண்டம் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2017-03-23 16:59 IST   |   Update On 2017-03-23 16:59:00 IST
பெண்ணை திட்டி தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஜெயங்கொண்டம் கோர்ட் தீர்ப்பளித்தது.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சூரக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் (எ) நெடுஞ்சேரியார் (66). கடந்த 2007-ம் ஆண்டு இவரது வீட்டின் அருகில் வசித்த சந்திரகாசன் மனைவி இந்திராணி (இறந்துவிட்டார்) என்பவரை திட்டி தாக்கியதில் கை ஒடிந்தது.

இதுகுறித்து இந்திராணி ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார். இவ்வழக்கு தொடர்பாக ஆண்டிமடம் போலீசார் ராஜாராம் மீது ஜெயங்கொண்டம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மதிவாணன் பெண்ணை திட்டிய ராஜாராமுக்கு 2 ஆண்டு மெய்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒருமாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Similar News