செய்திகள்

தா.பழுரில் கோவிலில் திருடியவர் கைது

Published On 2017-03-13 15:12 IST   |   Update On 2017-03-13 15:12:00 IST
அரியலூர் மாவட்டம் தா.பழுரில் கோவிலில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தா.பழுர்:

அரியலூர் மாவட்டம் தா.பழுர் கோடாலிகருப்பு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்டியலை உடைத்து மர்மநபர்கள் திருடி சென்றனர்.

இது குறித்து தா.பழுர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வந்தனர். இதில் கோவிலில் திருடியது கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்த ரெங்கசாமி (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News