செய்திகள்

அரியலூரில் முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறுகிறது

Published On 2017-03-09 17:32 IST   |   Update On 2017-03-09 17:32:00 IST
அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.

எனவே அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரிபவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கையினை மனுவாக கலெக்டரிடம் அன்றைய தினம் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனுவின் இரு பிரதிகளை அடையாள அட்டை நகலுடன் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ், தெரிவித்துள்ளார்.

Similar News