செய்திகள்
அரியலூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் பெண் எரித்துக்கொலை: போலீசார் விசாரணை
அரியலூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் இளம்பெண் நிர்வாண நிலையில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ளது மரவனூர் கிராமம். திருச்சி-சென்னை ரெயில் தண்டவாள பகுதியை யொட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தின் வடபுறத்தில் ஊத்தங்கால் ஓடை உள்ளது.
இந்த பகுதியில் தண்டவாளம் அருகே உள்ள முட்புதரில் நேற்று இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது பற்றி மரவனூர் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிராம நிர்வாக அதிகாரி கலைக்கோவன் அரியலூர் போலீ சில் புகார் அளித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எரிந்து கரிக்கட்டையாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த பெண்ணின் அருகே அவரது உடைகள் கிடந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் பெண் யாராவது காணாமல் போயிருக்கிறார்களா? அல்லது அந்த பெண் வெளியூரை சேர்ந்தவரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் அருகே உள்ளது மரவனூர் கிராமம். திருச்சி-சென்னை ரெயில் தண்டவாள பகுதியை யொட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தின் வடபுறத்தில் ஊத்தங்கால் ஓடை உள்ளது.
இந்த பகுதியில் தண்டவாளம் அருகே உள்ள முட்புதரில் நேற்று இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது பற்றி மரவனூர் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிராம நிர்வாக அதிகாரி கலைக்கோவன் அரியலூர் போலீ சில் புகார் அளித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எரிந்து கரிக்கட்டையாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த பெண்ணின் அருகே அவரது உடைகள் கிடந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் பெண் யாராவது காணாமல் போயிருக்கிறார்களா? அல்லது அந்த பெண் வெளியூரை சேர்ந்தவரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.