செய்திகள்
அரியலூர் அருகே பள்ளி மாணவி மாயம்
அரியலூர் அருகே பள்ளி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள ஒட்டக்கோவில் கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல். இவரது மகள் பூமிஅரசி (வயது 16) 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் தனியார் பயிற்சி மையத்திற்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கம் போல் பூமிஅரசி அரியலூரில் உள்ள தனியார் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முத்துவேல் அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரில் பூமி தேவியை கள்ளக்குடி அருங்கால் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் (21) என்பவர் கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூமிஅரசி மற்றும் விஜயனை தேடி வருகின்றனர்.