உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2023-02-23 09:57 GMT   |   Update On 2023-02-23 09:57 GMT
  • மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

சேலம்:

மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் சிலம்பன் காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32), டிரைவர்.

இவர் கடந்த 8-ந் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது

இது குறித்த அவர் மல்லூர் போலீசில் புகார் அளித்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சேலம் தாதகாப்பட்டி பங்களா தோட்டம் பகு தியை சேர்ந்த தினேஷ் (23), தாதகாப்பட்டி அம்பாள் ஏரி பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வேறு எங்கும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்றும் விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News