உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் 2 ரவுடிகள் கைது

Published On 2023-06-13 12:54 IST   |   Update On 2023-06-13 12:54:00 IST
  • பண்ருட்டியில் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
  • பழிவாங்கும் நோக்கத்துடன் ரவுடிகள்சுற்றி திரிவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்த் என்கிற வசந்தகுமார்(18),சுமன் (24) கொக்குபாளையம் குணா(22) இவர்கள் மூவரும் கொலை வழக்கு ஒன்றில்கைதாகிஜா மீனில் ்வெளிவந்துள்ளனர். நேற்று முன்தினம் ரவுடி வசந்த் என்ற வசந்தகுமாரை கருணா கத்தியால் குத்தினார்.

இந்த சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கத்துடன் ரவுடிகள்சுற்றி திரிவதாகபண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு , தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் ரவுடிகள் சுமன் ,குணா இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags:    

Similar News