உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட இருவரை படத்தில் காணலாம்.

சிறுபாக்கம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2022-10-27 07:27 GMT   |   Update On 2022-10-27 07:27 GMT
  • சிறுபாக்கம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக சிறுபாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கடலூர்:

சிறுபாக்கம் அருகே கீழ ஒரத்தூர் கிராமத்தின் ஏரிக்கரை யில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக சிறுபாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அப்பகுதிக்கு சென்ற வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஜ.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை (வயது 75), கள்ளக்குறிச்சி தாலுக்கா அசக்களத்தூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (55) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News