உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் 2 மாணவிகள் காதலனுடன் ஓட்டம்

Published On 2023-07-01 09:14 GMT   |   Update On 2023-07-01 09:14 GMT
  • காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு சமயபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒழுங்காக படிக்குமாறு தங்களது மகளுக்கு அவர்கள் அறிவுரை கூறினர்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி தனது பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டுக்கு திரும்பி வராததால் அச்சம் அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவர்கள் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

ராமசாமி நகரை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி. இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.

சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி அவரது காதலனுடன் சென்றது தெரிய வந்தது. மாணவியை போலீசார் தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News